ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் போட்டிகளை 40,000 பார்வையாளர்கள் வரை கண்டு கழிக்க அனுமதி
ஆஸ்திரேலியாவில் விளையாட்டு போட்டிகளை காண சிறிய அரங்குகளில் 10 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பெரிய ரசிகர் கூட்டங்களை கொண்ட நேஷனல் ரக்பி லீக் மற்றும் ஆஸ்திரேலிய கால்பந்து லீக் பார்வையாளர்கள் இன்றி மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்தும் விதமாக விளையாட்டுப் போட்டிகளை 40 ஆயிரம் பார்வையாளர்கள் வரை நேரில் கண்டுகழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள், கலை நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு பொருந்தும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
Australia eliminates coronavirus in many areas, clearing the way for sports fans to soon return to stadiums and for foreign students to prepare to fly back to classes https://t.co/CBCxvfXO3r via @Colpackham pic.twitter.com/YYPhtai4Up
— Reuters (@Reuters) June 12, 2020
Comments