எச் 1 பி விசா வழங்குவதை நிறுத்த அமெரிக்கா பரிசீலனை

0 1618

பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி எச்1 பி, எல் 1, ஜே 1 விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இதனால் குடியேற்ற உரிமை இல்லாத வெளிநாட்டவர்கள்  அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 60 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை வரும் 22ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்கான எச் 1 பி விசாக்கள் வழங்குவதை அக்டோபர் 1 முதல் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பது பற்றி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் எல் 1, ஜே 1 விசாக்களையும் நிறுத்தி வைக்கப் பரிசீலித்து வருகிறது.

அதே நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்கள், உணவு வழங்கல் நிறுவனங்களுக்குப் பணிக்கு வருபவர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. எச் 1 பி விசாவுக்கான கட்டணத்தை 20 ஆயிரம் டாலராக உயர்த்தவும் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments