ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டி..! கங்குலி புதிய தகவல்

0 2796

ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில் இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட அப்போட்டிகள் குறித்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து வாய்ப்புகள் அடங்கிய சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளார்.

2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியை இந்தாண்டே நடத்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரும்புவதாகவும், வீரர்களும், அணி உரிமையாளர்களும் அதையே எதிர்பார்ப்பதால், விரைவில் அதுகுறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments