மும்பையில் 1,871 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1042

மும்பையில் ஆயிரத்து 800 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த அறிக்கையில், மும்பை மாநகரக் காவல் துறையில் ஆயிரத்து 871 போலீசார் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 853 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 21 போலீசார் பெருந்தொற்றினால் உயிரிழந்திருப்பதாகவும், மாநில ரிசர்வ் போலீசாரில் 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் மும்பை போலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments