செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

0 1553

மதுரை திருமங்கலத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞருடன் போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமங்கலத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவரும், அதே பகுதியை பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களுடைய காதலை ஏற்க மறுத்த பெண் வீட்டார் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த காதலன் பிரசாந்த், தன்னை காதலியுடன் சேர்த்து வைக்கக் கூறி கையில் பெட்ரோலுடன் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர், இளைஞருடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments