திருச்சி - நாகர்கோவில் இடையே வாரத்தின் 7 நாட்களும் சிறப்பு ரயில்

0 4820

திருச்சி - நாகர்கோவில் சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.

முன்பதிவு செய்திருந்த பயணிகள் மட்டும் வெப்பநிலை கண்டறியும் சோதனைக்குப் பின் ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்ததுடன், முகக்கவசங்களை அணிந்திருந்தனர்.

திருச்சி - நாகர்கோவில் இடையே இன்று முதல் நாள்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சியில் காலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மதியம் ஒரு மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் இரவு பத்தேகால் மணிக்குத் திருச்சி சென்று சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments