வெயில் தாக்கம் தாங்காமல் நீரில் உருண்டு புரண்ட பாண்டா கரடி

0 1300
வெயில் தாக்கம் தாங்காமல் நீரில் உருண்டு புரண்ட பாண்டா கரடி

ஜெர்மனியில் வெயில் கொடுமை தாளாமல் குட்டி பாண்டா கரடி ஒன்று தண்ணீரில் உருண்டு புரண்ட வீடியோவை ஏராளமானோர் ரசித்து வருகின்றனர்.

அந்நாட்டில் தற்போது 72 டிகிரி வெப்பம் தகித்து வருகிறது. இதனால் பெர்லினில் விலங்கியல் பூங்காவில் உள்ள உயிரினங்கள் வாடி வதங்கி நின்றன. இந்நிலையில் அங்கு வளர்க்கப்பட்டு வரும் குட்டி பாண்டா கரடி குளிப்பதற்கு சிறிய நீச்சல் குளம் போன்ற அமைப்பு பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டது.

இதனைக் கண்டதும் உற்சாகமடைந்த பாண்டா தனக்கான நீச்சல் குளத்தில் உருண்டு புரண்டது. அதில் பெரும்பாலான நீர் வெளியில் கொட்டியது. ஆனாலும் விடாத பாண்டா குட்டி தானே தண்ணீரில் இருப்பதாக நினைத்து புற்களில் உருண்ட நேரம்தான் அதிகமாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments