உக்கிரம் தணியும் கொரோனா சிகிச்சை முடிந்து 45 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

0 5327
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். உச்சம் எட்டிய கொரோனாவின் உக்கிரம், கொஞ்சம் தணிந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். உச்சம் எட்டிய கொரோனாவின் உக்கிரம், கொஞ்சம் தணிந்து வருகிறது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து, வீடு திரும்புவோரின் எண்ணிக்கை ஒருபக்கம் உயர, மற்றொரு பக்கம் வைரஸ் தொற்று பாதிப்பின் வேகம் கணிசமாக தணிந்து வருகிறது.

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு, 40 ஆயிரத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. அதேநேரம், அங்கு உயிர்ப்பலி ஆயிரத்து 390 ஐ எட்டி உள்ளது.

மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2- வது இடம் வகிக்கிறது.

குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 500 - ஐ தாண்ட, டெல்லியில் கொரோனா பாதிப்பு, 11 ஆயிரத்து 700 - ஐ நெருங்கி வருகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப், தெலங்கானா, பீஹார், கர்நாடகா மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், ஏற்கனவே, 14 மாநிலங்கள் இடம் பிடித்திருக்க இந்த பட்டியலில் இப்போது ஒடிசாவும் இடம் பிடித்துள்ளது.

ஹரியானாவை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு, ஆயிரத்தை எட்டும் நிலையில் உயர்ந்து வருகிறது.
கேரளாவில், கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 609 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, ஒரே நாளில் 132 பேர் பலி ஆனார்கள். 63 ஆயிரத்து 624 பேர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வர, கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை, சுமார் 45 ஆயிரம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments