திருப்பதி லட்டு 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்பனை

0 12997

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பாதி விலையில் அதாவது 25 ரூபாய்க்கு ஆந்திரத்தில் உள்ள அனைத்து தேவஸ்தான தகவல் மையங்களிலும் லட்டு விற்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

மொத்தமாக லட்டு தேவைப்படுவோர் ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரி ஹரிநாத், லட்டு தயாரிப்பு அதிகாரி ஆகியோரைத் தொடர்பு கொண்டு எவ்வளவு லட்டுகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்திலும் லட்டு விற்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments