மும்பையில் ஏழை மக்களுக்கு ரகசியமாக உதவி வரும் சல்மான் கான்

0 4371

மும்பையில் ஏழை மக்கள் ஏராளமானோருக்கு இந்தி நடிகர் சல்மான் கான், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வழங்கி ரகசியமாக உதவி வருவது தெரிய வந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் வேலைக்கு செல்ல முடியாமல் தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற நபர்களுக்கு சல்மான் கான் ரகசியமாக நாள்தோறும் உதவி செய்து வருகிறார்.

பீயிங் ஹங்க்ரி ("Being Haangryy") என்ற வாகனம் மூலம் அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் பொட்டலமாக கட்டப்பட்டு, ஏராளமானோருக்கு அவர் சார்பில் அளிக்கப்படுகிறது. இதை அவர் வெளிப்படையாக அறிவிக்காத போதிலும், ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டதால் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments