பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தினமும் 50 ரயில்கள் - அமைச்சர் பியூஷ் கோயல்

0 1312
பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தினமும் 50 ரயில்கள்

பீகாரில் புலம் பெயர்ந்தோரை கொண்டு சேர்ப்பதற்காக அம்மாநிலத்தில் தினந்தோறும் 50 ரயில்களை இயக்க முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒப்புக் கொண்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடந்த 1ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டதிலிருந்து பீகாருக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வந்துள்ளனர். தற்போது மேலும் 50 ஆயிரம் தொழிலாளர் வரும் நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பீகார் முதல்வருடன் தான் கலந்து பேசியதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழிலாளர்களை அழைத்துச் செல்ல நாளொன்றுக்கு 50 ஷ்ராமிக் ரயில்களை இயக்க நிதீஷ்குமார் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments