மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற அனுமதிப்பதற்கு நிபந்தனைகள் விதிப்பதா? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

0 2088
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் மாநில அரசு பெற உள்ள கடன்கள், மாநில அரசின் எதிர்கால வரி வருவாய் மூலம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியவை, மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் மானியங்கள் அல்ல, அப்படி இருக்கும்போது கூடுதலாக கடன்பெறுவதற்கு நிபந்தனைகள் விதிப்பது தேவையற்றதாகத் தோன்றுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் மாநில அரசு பெற உள்ள கடன்கள், மாநில அரசின் எதிர்கால வரி வருவாய் மூலம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியவை, மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் மானியங்கள் அல்ல, அப்படி இருக்கும்போது கூடுதலாக கடன்பெறுவதற்கு நிபந்தனைகள் விதிப்பது தேவையற்றதாகத் தோன்றுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கருத்தொற்றுமை எட்டப்பட வேண்டிய பொருளாதார சீர்திருத்த திட்டத்தை  இதுபோன்ற நேரங்களில் திணிப்பது கூட்டுறவுக் கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  தமிழகத்தை பொறுத்தவரை, கூடுதலாகக் கடன்பெற 4 முக்கிய துறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சில சீர்திருத்தங்களை எந்த நிதியுதவியும் எதிர்பார்க்காமலே மாநில அரசு ஏற்கெனவே செய்துள்ளது.

ஆனால், மின்விநியோகம் போன்ற துறைகளில் சீர்திருத்தம் போன்றவை அரசியல்ரீதியாக சிக்கலானவை என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நீக்குவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே, மாநிலங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை புரிந்துகொண்டு, உரிய வழிகாட்டுதல்களில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments