மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் ஒருவர் உயிரிழப்பு

0 1734

மேற்கு வங்கத்தில் பட்டம் விடப்பட்ட போது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து ஒருவர் உயிரிழந்தார்.

தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் சாலை மேம்பாலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கழுத்தில் ரத்தம் வழிந்தபடி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதனைக் கவனித்த போக்குவரத்து போலீசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பட்டம் விடப்பட்ட போது சீனாவில் தயாரிக்கப்பட்ட மாஞ்சா நூல் அந்த நபரின் கழுத்தை அறுத்தது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments