ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 5 பேர் கைது : அவர்களின் மறைவிடத்தைக் கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினர்

0 3500
ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 5 பேரைக் கைது செய்த பாதுகாப்புப் படையினர் அவர்களின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 5 பேரைக் கைது செய்த பாதுகாப்புப் படையினர் அவர்களின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள அரைசால் கான்சாயிப் என்னும் ஊரில் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஒரு வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர். அந்த வீட்டின் உரிமையாளரான சகூர் வானியைக் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் ஆதரவாளர் என்பதும், பயங்கரவாதிகள் மறைந்திருக்க இடம், பொருட்கள் கொடுத்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments