கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் 5 லட்சம் அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போகும்-ஆய்வில் தகவல்

0 1318

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் சுமார் ஐந்தரை லட்சம் அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வில், உலகம் முழுவதும் கடந்த 12 வாரங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 2 கோடியே 84 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால், கூடுதலாக 24 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்தாகும் சூழல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments