வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 5 லட்சம் முகக்கவசம் பறிமுதல்

0 2862

டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 லட்சம் முக கவசங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

டெல்லி விமான நிலைய சரக்கு முனையத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த பொருட்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக இருந்த பெட்டிகளை சோதனையிட்டதில், சுமார் 5 லட்சம் முக கவசங்கள், 57 லிட்டர் சானிடைசர், 952 பி.பி.இ. கிட் எனப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் இவை அனைத்தும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments