பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் இடையே நடைபெறும் துப்பாக்கிச் சண்டையால் ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்

0 2159
பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் இடையே நடைபெறும் துப்பாக்கிச் சண்டையால் ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் இடையே நடைபெறும் துப்பாக்கிச் சண்டையால் பதற்றம் நிலவுகிறது.

குல்காம் மாவட்டத்திலுள்ள  யாம்ராச் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாநில போலீசார், சிஆர்பிஎப் வீரர்கள், ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து அவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரும் தாக்குதல் தொடுத்தனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெறுகிறது. அங்கு எத்தனை பயங்கரவாதிகள் உள்ளனர் என்பது உறுதியாக தெரியவில்லை. 2 முதல் 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments