ஊரடங்கால் பத்திரப்பதிவு துறையில் ரூ.1,000 கோடி இழப்பு?

0 1912

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பத்திரப்பதிவு துறையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசுக்கு பெருமளவு வருவாய் ஈட்டி தரும் துறைகளில் பத்திரப்பதிவு துறையும் ஒன்று. இதன் மூலம் கடந்த 2 நிதி ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், மார்ச் 25 முதல் மே 12-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில்  ஆயிரத்து 100 கோடி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக 100 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டப்பட்டுள்ளதாக பத்திர பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments