தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் கார்கள் தடுத்து நிறுத்தம்

0 15514

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் கார்களை மாநில எல்லையிலேயே கர்நாடக அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இ பாஸ் பெற்றுக்கொண்ட ஏராளமானோர் அண்டை மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில்  தமிழகத்திலிருந்து கர்நாடகா மாநிலத்திற்குள் நுழையும் அனைத்து சொகுசு கார்களையும் அம்மாநில காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இதற்காக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments