கொரோனாவிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

0 1355
டெல்லியில் சிகிச்சைக்குப் பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய காவலர் ஒருவரை சக போலீசார் மேள தாளத்துடன், பூமாலையிட்டு வரவேற்ற வீடியோ வெளியாகியுள்ளது.

டெல்லியில் சிகிச்சைக்குப் பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய காவலர் ஒருவரை சக போலீசார் மேள தாளத்துடன், பூமாலையிட்டு  வரவேற்ற வீடியோ வெளியாகியுள்ளது.

டெல்லியின் ஓக்லா மண்டி பகுதியை சேர்ந்த காவலர் பிரவீன் என்பவர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சிகிச்சையில் கொரோனாவில் இருந்து அவர் குணமடைந்தார். 2 முறை மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் நோய் பாதிப்பில்லை என்பது உறுதியானது.

இதையடுத்து தாம் பணிபுரிந்த காவல்நிலையத்துக்கு அவர் பணிக்கு திரும்பினார். அப்போது அங்கிருந்த சக போலீசார், பிரவீனை மேளதாளம் தட்டியும், பூமாலையிட்டும், கைதட்டியும் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். பின்னர் பெண் காவலர் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments