அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி : உலுக்கும் கொரோனாவால் தவிக்கும் தமிழகம்

0 19599
தமிழகத்தில் 526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 4 பேரை கொரோனா காவு வாங்கி உள்ளதால், வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 4 பேரை கொரோனா காவு வாங்கி உள்ளதால், வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 

உலுக்கும் கொரோனாவால் மிரளும் தமிழகத்தில், கடந்த ஒரு வாரமாக வைரஸ் தொற்றால் உறுதி ஆனோர் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக அதிகரித்தது.

வைரஸ் தொற்றால் உறுதி ஆனவர்களில் 4 ஆயிரத்து 664 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4 ஆயிரத்து 248 பேர் தனிமை வார்டுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஒரே நாளில் 4 பேரை கொரோனா காவு வாங்கி விட்டதால், உயிர்ப்பலி 44  ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 219 பேர் குணமடைய , இதுவரை ஆயிரத்து 824 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 67 வயது பெண் ஒருவர், சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். ராமநாதபுரத்தை சேர்ந்த 70 வயது பெண்,
சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், சென்னையை சேர்ந்த 58 வயது மற்றொரு பெண், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் மரணம் அடைந்தனர். சென்னையை சேர்ந்த 73 வயது பெண் ஒருவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா காவு வாங்கிய 44 பேரில், 27 பேர் சென்னையை சேர்ந்த வர்கள். செங்கல்பட்டில் 3 பேரும், மதுரை மற்றும் விழுப்புரத்தில் தலா 2 பேரும் உயிரிழந்தனர். கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சி, ராமநாதபுரம், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் பலி ஆகி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments