குடிபோதையில் தகராறு - வேடிக்கை பார்க்க வந்த புதுமாப்பிளைக்கு கத்தி குத்து

0 2292
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குடிபோதையில் இரு பிரிவினருக்கிடையே நடந்த தகராறில் ஒன்றும் அறியாத புதுமாப்பிளை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குடிபோதையில் இரு பிரிவினருக்கிடையே நடந்த தகராறில் ஒன்றும் அறியாத புதுமாப்பிளை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொட்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் குடிபோதையுடன் இருசக்கர வாகனத்தில் செட்டியபட்டி கிராமத்துக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் அங்கிருந்த மக்களிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில் சத்தம் கேட்டு அப்பகுதி பொறியாளரான விஷ்ணுப்பிரியன் என்பவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அவரை போதைக் கும்பல் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் பொட்டியபுரத்தைச் சேர்ந்த 12 பேரை கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments