நச்சுவாயு கசிந்த எல்.ஜி. தொழிற்சாலையை வேறிடத்துக்கு மாற்றக் கோரி மக்கள் போராட்டம்

0 1292
ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் நச்சுவாயு கசிந்த எல்.ஜி. தொழிற்சாலையை வேறிடத்துக்கு மாற்றக் கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் நச்சுவாயு கசிந்த எல்.ஜி. தொழிற்சாலையை வேறிடத்துக்கு மாற்றக் கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்ஜி தொழிற்சாலையில் ஸ்டைரீன் நச்சுவாயு கசிந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்தத் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்றி வேறிடத்துக்கு மாற்றக்கோரியும், நச்சுவாயுக் கசிவுக்குக் காரணமானவர்களைக் கைது செய்யக் கோரியும் உள்ளூர் மக்கள் ஆலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments