திரைப்படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி

0 1505

திரைப்படத் துறையில் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை வரும் திங்கட்கிழமை முதல் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளைச் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் சின்னதிரை தயாரிப்பாளர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த முதலமைச்சர், படத்தொகுப்பு, குரல்பதிவு, கம்ப்யூட்டர் மற்றும் விசுவல் கிராபிக்ஸ், நிற கிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை வரும் திங்கட்கிழமை முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments