யெஸ் வங்கி முன்னாள் அதிகாரி ராணா மற்றும் குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

0 801
யெஸ் வங்கி முன்னாள் அதிகாரி ராணா மற்றும் குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

யெஸ் பேங்க்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ராணா கபூர், அவர் மனைவி பிந்து , மகள்கள் ராக்கி, ராதா மற்றும் ரோஷிணி, உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் மும்பையில் உள்ள நிதி மோசடிகளுக்கான நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

ராணா மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது 55 ஆயிரம் கோடி வங்கிப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 8ம் தேதி ராணா கைது செய்யப்பட்டார். DHFL நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments