வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

0 1468
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மித மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், திருப்பூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஷியசாக பதிவாகக் கூடும் என்றும் மக்கள் காலை  11:30 முதல் பிற்பகல் 3:30 வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல்,சிவலோகம், சித்தார், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments