மெஹ்பூபா முப்தியின் வீட்டுச் சிறை 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

0 1393

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தியின் தடுப்புக் காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள மெஹ்பூபா முப்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம்தேதி முதல் சிறைவைக்கப்பட்டுள்ளார். வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டிருந்த மெஹ்பூபாவின் காவல் முடிவடைய இருந்த நிலையில், ஸ்ரீநகர் மாவட்ட நீதிபதி ஆணைப்படி அவருடைய சிறைவாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 8 மாதங்களாக வீட்டுச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதும் ஓமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் மீதும் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.இதில் மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் மெஹ்பூபாவின் காவல் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைக்கு ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments