நாட்டின் வேலையின்மை 27.1 சதவீதமாக உயர்வு - CMIE

0 2038

இந்தியாவில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நான்கில் ஒருவர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக, நாட்டின் பொருளாதார நிலையை கண்காணிக்கும் சிஎம்ஐஇ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மாதாந்திர அறிக்கையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் தாக்கத்தால், பல்வேறு முக்கிய துறைகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மே 3ந் தேதி கணக்கீட்டின் படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையின்மை 27 புள்ளி 1 சதவீதம் அக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமைப்பு மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலரும் வேலை வாய்ப்பை இழப்பதால், அதிக அளவிலான மக்கள் வறுமையின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments