55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வெளியே வரவேண்டாம்- மும்பை காவல் ஆணையர் உத்தரவு

0 1532

மும்பையில், கடந்த 3 நாட்களில் 50 வயதுக்கு மேற்பட்ட  போலீஸ் காவலர்கள் 3 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநகர காவல் ஆணையர் பரமம் பீர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களை  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் அவர் மாநகர காவல்துறை அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறார். நாட்டில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாக மும்பை உள்ளது.

5776 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு மட்டும் 219 பேர் அதற்கு பலியாகி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments