நிதி ஆயோக் ஊழியருக்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதியானதால் அலுவலக கட்டிடம் சீல் வைப்பு

0 1985

நிதி ஆயோக் அமைப்பு ஊழியர் ஒருவருக்கு கொரோனா நோய் பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டதால், டெல்லியிலுள்ள அந்த அமைப்பு தலைமையக கட்டிடம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

டெல்லியிலுள்ள நிதி பவன் (Niti Bhawan ) கட்டிடத்தில் நிதி ஆயோக் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த கட்டிடம் 2 நாள்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள், சுயதனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே டெல்லியின் ஜோர் பாக் பகுதியில் ராஜீவ் காந்தி பவனிலுள்ள விமான போக்குவரத்து அமைச்சக அலுவலக ஊழியருக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் அக்கட்டிடம் சீல் வைக்கப்பட்டு நேற்றுதான் திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நிதி ஆயோக் கட்டிடம் மூடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments