நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராகப் போராடும்போது, காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராகப் போராடுகிறது - பிரகாஷ் ஜவடேகர்

0 4208
நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும்பொழுது, காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வருவதாகப் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும்பொழுது, காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வருவதாகப் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்துள்ளார்.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு 23 ஆயிரம் கோடி ரூபாயும், புல்லட் ரயில் திட்டத்துக்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் கோடி ரூபாயும் மத்திய அரசு வீணாக செலவழிப்பதாக காங்கிரசின் ரன்தீப்  சுர்ஜிவாலா குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும்போது, காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராகப் போராடுவதாக சாடினார்.

காங்கிரசின் இத்தகைய செயல்பாடு ஒருநாள் கேள்விக்குள்ளாகும் என்றும், அதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்றும் ஜவடேகர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments