கொரோனா நோய் பாதிப்பு மே மாத மத்தியில் உச்சநிலை ? ஆய்வு முடிவில் தகவல்

0 16713
மே மாத மத்தியில் கொரோனா பாதிப்பு உச்சநிலையை அடையும்: ஆய்வு முடிவு

இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு மே மாதம் மத்தியில் உச்சகட்டத்தை அடைந்து படிப்படியாக பாதிப்பு குறையும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து டைம்ஸ் பத்திரிகை குழுமம் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலியில் நேரிட்ட பாதிப்பை அடிப்படையாக கொண்ட சதவீத மதிப்பீடு உள்ளிட்ட 3 மாதிரிகளை கணக்கில் கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது. அதில் மே மாதம் 22ம் தேதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 15ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், செப்டம்பர் 15ம் தேதிக்குள் பாதிப்பு பூஜ்யமாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும், மே 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டால், ஜூன் மாத மத்தியில் பூஜ்யமாக குறைய வாய்ப்புள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments