மத்தியக் குழுக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ... மம்தா பானர்ஜி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்...!

0 3869
மத்தியக் குழுக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்

கோவிட் 19 நோய்த்தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மத்திய சுகாதாரக் குழுக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா மற்றும் ஜல்பைகுரி உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு நிலவரம் குறித்த கள ஆய்வு மேற்கொள்ளச் சென்ற மத்திய நிபுணர் குழுக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக புகார்கள் வந்ததையடுத்து, உள்துறை அமைச்சகம் மேற்குவங்க அரசை வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் அதிகாரிகளாலும் மாநில அரசு அதிகாரிகளாலும் மத்திய நிபுணர் குழுக்களுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை என்று மத்திய அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய குழுக்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்துமாறு மம்தா பானர்ஜி அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments