கொரோனா தொற்றால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

0 10173
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு டெல்லியில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு டெல்லியில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளுடன் கலாவதி சரன் குழந்தைகள் மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனை மருத்துவர்கள் சோதனைக்கு உட்படுத்திய போது அந்தக் குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து அந்தக் குழந்தைக்கு கடந்த 45 நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

ஆனால் கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை நேற்று உயிரிழந்தது. இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் இந்தக் குழந்தைதான் வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments