அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறமுள்ள மலை மீது ஏறிய ரஷ்ய தம்பதி

0 4124
ரஷ்யாவில் இருந்து கொண்டு வந்த பணம் தீர்ந்ததால் மன உளைச்சல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள சுமார் 2 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள மலை மீது ஏறிய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கணவன், மனைவியை ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்டறிந்து காவல்துறையினர் மீட்டனர்.

மாஸ்கோவில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்மீக சுற்றுலா வந்த விக்டரும், அவரின் மனைவி டாட்டியானாவும், ஒரு வீட்டை 300 ரூபாய் வீதம் நாள் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். ரஷ்யாவில் இருந்து வந்தபோது கொண்டு வந்த பணம் தீர்ந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்த அவர்கள், வீட்டை விட்டு வெளியேறி மலைக்கு சென்று தியானம் செய்யப் போவதாக தகவல் கிடைத்ததால் ஆளில்லா குட்டி விமானம் மூலம் இருவரும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து போலீஸார் மீட்டனர். அவர்களுக்கு தேவையான பழங்கள் உள்ளிட்டவற்றை அளித்து போலீஸார் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments