இந்தியாவின் உதவிக்கு ஐ.நா. பொதுச்செயலர் நன்றி

0 2195
இந்தியாவின் உதவிக்கு ஐ.நா. பொதுச்செயலர் அன்டானியோ குட்டரஸ் நன்றி

கொரோனாவுக்கு எதிரான போரில் உதவ உலக நாடுகளுக்கு மாத்திரைகளை அனுப்பி வைத்த இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச்செயலர் அன்டானியோ குட்டரஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் மாத்திரைகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச்செயலர் அன்டானியோ குட்டரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரோனா போரில் ஒவ்வொரு நாடும் பிறநாடுகளுக்கு உதவ வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார். அவ்வாறு உதவும் நாடுகளுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments