தடையை மீறி மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்க விட்ட 8 பேர் கைது

0 2211
சென்னை சைதாப்பேட்டையில் தடையை மீறி மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்க விட்ட 8 பேர் கைது

சென்னை சைதாப்பேட்டையில் தடையை மீறி மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்க விட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இளைஞர்கள் பலரும் பட்டம் பறக்க விடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்க விடுபவர்களை போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், சைதாப்பேட்டை பகுதியில் இது தொடர்பாக 8 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது தடையை மீறி செயல்படுதல், தொற்றுநோய் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments