சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் மண்டல வாரியாக வெளியீடு

0 3350

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்தபடியாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 28 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 23 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 22 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் 80 பகுதிகள் முழுமையாக கட்டுபடுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments