இந்தியாவில் 220-க்கு மேற்பட்ட கொரோனா ஆய்வகங்கள் - பிரதமர் மோடி

0 1711

கொரோனா பரிசோதனைக்கு கடந்த ஜனவரியில் ஒரே ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்த நிலையில், இன்று 220-க்கும் அதிகமான ஆய்வகங்கள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் அனுபவத்தின்படி, 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது, மருத்துவமனைகளில் ஆயிரக் கணக்கில் படுக்கைகள் தேவை என்றும், ஆனால் இந்தியாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான படுக்கைகள் உள்ளன என்றும், 600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த மருத்துவ வசதிகள் மேலும் விரிவுடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். கொரோனா தடுப்பில் மற்ற நாடுகளைவிட இந்தியா மிகச்சிறப்பான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உலகின் பாராட்டை பெற்றிருப்பதாகவும் மோடி கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments