வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 1464 சீனர்களுக்கு கொரோனா

0 4575

வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்குக் கொரோனா வைரஸ் தொற்றுடன் வந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் தேசிய நலவாழ்வு ஆணையத்தின் அறிக்கையில் திங்களன்று புதிதாக 89 பேருக்குக் கொரோனா வைரஸ் உள்ளது கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அவர்களில் 3 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 86 பேர் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்குத் திரும்பியவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுடன் வந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் ஆவர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments