'வீட்டில் இருந்து வேலை' நடைமுறைக்கு விடை கொடுத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்

0 2694

பிரதமர் மோடியின் உத்தரவை ஏற்று, வீட்டில் வேலை நடைமுறைக்கு விடை கொடுத்து விட்டு மத்திய அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் இன்று அலுவலகங்களுக்கு வந்து பணிகளை கவனித்தனர். 

கொரோனா தொற்று துவங்கியதில் இருந்து  பல அமைச்சர்களும், அதிகாரிகளும் அலுவலகங்களுக்கு வருவதை தவிர்த்து விட்டு வீடுகளில் இருந்தவாறு அரசு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகு, அமைச்சர்களும், அரசு வாகனத்தை பயன்படுத்தும் இணைச் செயலர் அந்தஸ்திற்கு கூடுதலான அதிகாரிகளும் திங்கள் முதல் அலுவலங்களுக்கு வருமாறு மோடி உத்தரவிட்டார். இந்த நிலையில் செய்தி ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி,  உள்ளிட்ட பலர் இன்று காலையிலேயே அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments