ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முதல்வர் ஆலோசனை..!

0 9505

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும்  செயலாளருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கிக் கொள்ளப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கை நீட்டிக்கும்பட்சத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் ஏற்பாடுகள், மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளதன் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய சுகாதாரத்துறை நடவடிக்கைகள், ராப்பிட் டெஸ்ட் எனப்படும் விரைவுப் பரிசோதனை கருவிகளை எந்த பகுதிகளில் விநியோகிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments