சுற்றுலா விசாவில் வந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் 8 பேர் கைது

0 5415

சென்னை முத்தியால்பேட்டையில் பதுங்கி இருந்த 3 பெண்கள் உட்பட 8 வெளிநாட்டவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை முத்தியால்பேட்டை அப்பு மேஸ்திரி தெருவில் உள்ள மசூதியில் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருக்களான ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் தங்கியிருந்துள்ளனர்.

சுற்றுலா விசாவில் வந்த இவர்கள் விதிகளை மீறி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் வந்துள்ளது. இது குறித்துத் தகவல் கிடைத்ததை அடுத்துக் காவல் உதவி ஆணையர்
கோடிலிங்கம் தலைமையில் சிறப்பு படையினர் அவர்களை கைது செய்தனர்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments