நாட்டிலேயே முதன்முறையாக தாராவியில் கொரோனா தொற்றாளர்களுக்கு மலேரியா மருந்து...!
நாட்டிலேயே முதன்முறையாக மும்பை தாராவியில் கொரோனா தொற்றாளர்களுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோராகுயின் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் நெருக்கம் மிகவும் அதிகமாக உள்ள மும்பை தாராவி குடிசைப் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் கவலை அடைந்துள்ள மகாராஷ்டிர அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தொற்று தீவிரமடையும் நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்படும் நிலையில், தாராவியில் லேசாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடுப்பு மருந்தாக இது வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டுமே ஹைட்ராக்சிகுளோரோகுயின் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Comments