குழந்தை பிறந்த 22 நாளில் பணிக்கு திரும்பிய IAS

0 9392

குழந்தை பெற்றெடுத்த மூன்றே வாரங்களில் பணிக்கு திரும்பியுள்ளார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையரான ஸ்ரீஜனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த மாதம் வரை பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், குழந்தை பிறந்த 22வது நாளில், மீண்டும் பணிக்கு திரும்பினார் ஸ்ரீஜனா. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், காலை முதல் இரவு வரை அலுவலகத்திலேயே இருந்து அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வருவது பற்றி கேட்டபோது, தனது தாயும், கணவரும் குழந்தையை கவனித்துக் கொள்வதாகவும், பால்புகட்டுவதற்காக 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு சென்றுவிட்டு வருவதாகவும் தெரிவித்தார் ஸ்ரீஜனா.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments