5 நாட்கள் மதுக்கடைகள் இயங்க அனுமதி..!

0 5227

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று முதல், 5 நாட்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.

அசாம் மாநில அறிவுறுத்தலின்படி அங்கு, மதுபான கடைகள் மற்றும் மொத்த விற்பனையில் ஈடுபடும் மதுபான கிடங்குகள் ஆகியவை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மேகாலயாவில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மதுபான கடைகள் மற்றும் கிடங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கொரோனா முன்னெச்சரிக்கையாக குறைந்த பட்ச ஊழியர்களுடன் செயல்பட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கடைகள் மற்றும் கிடங்குகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments