பார்சல் ரயில் சேவை ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு

0 2923

தெற்கு ரயில்வே பல்வேறு நகரங்களிடையே இயக்கி வரும் பார்சல் ரயில் சேவையை ஏப்ரல் 25ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

ஊரடங்கால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றியமையாப் பொருட்களை அனுப்புவதற்காகத் தெற்கு ரயில்வே சார்பில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில், சென்னை சென்ட்ரல் - கோவை, திருவனந்தபுரம் - கோழிக்கோடு, சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி இடையே பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதலில் ஏப்ரல் 9 முதல் 14 வரை ஆறு நாட்களுக்கு இரு வழிகளிலும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பார்சல் ரயில் போக்குவரத்தை ஏப்ரல் 25ஆம் தேதி வரை நீட்டிப்பதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments