கிருமிநாசினி தெளிப்புப் பாதையை பயன்படுத்த வேண்டாம் - தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர்

0 3577

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிப்புப் பாதையை பயன்படுத்த வேண்டாம் என, தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கிருமிநாசினி தெளிப்பு பாதைகள் பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்க வாய்ப்புள்ளதோடு, நோய்த்தொற்றை தடுக்கும் கைகளை கழுவும் பழக்கத்திலிருந்து மக்களை திசை திருப்பக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், வேதிப்பொருட்களின் கலவையை மக்கள் மீது தெளிப்பது என்பது ஆபத்தானதோடு மட்டுமின்றி பயனற்றது எனவும் தெரிவித்துள்ளார். எனவே, கிருமிநாசினி தெளிப்பு பாதைகளை அமைக்க வேண்டாம், அதை பயன்படுத்தவும் வேண்டாம் என தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments