மும்பையில் மருத்துவர்கள் உள்பட 100 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா

0 3342

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுமார் 100 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது, மருத்துவ ரீதியிலான பிரச்னையை அந்த மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது.

பாட்டியா மருத்துவமனையில் 10 செவிலியர்கள், 2 மருத்துவர்கள், ஒரு பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட 14 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தாதர் சஸ்ருசா (Shushrusha) மருத்துவமனையில் 2 செவிலியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் பல மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த சுமார் 80 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் அந்த மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன்மூலம் மருத்துவமனைகளில் இருந்த சுமார் 900 படுக்கைகளை பயன்படுத்த முடியாத நிலை நேரிட்டுள்ளது. மருத்துவமனைகளில் பின்பற்றப்படும் கொரோனா தடுப்புமுறை குறித்த கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments