அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் போரிஸ் ஜான்சன்

0 2358

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 4 நாட்களுக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆயினும் அவர் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனைகளில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டிவிட்டரில் பதிவுகளை வெளியிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments